Pages

Monday, March 1, 2010

சுதந்திரம்???..

கண்ணுக்குத்தெரியாத
தளைகளால்
பிணைக்கப்பட்டிருக்கிறேன்..

பூட்டுகள் எதுவும்
இல்லைதான்...
ஆனாலும்
விடுபடவும் முடியவில்லை!!!!

உனது விருப்பங்களெல்லாம், என்றோ
எனது
விருப்பங்களாகிவிட்டன:
எனக்கென்று ஓர் மனம்,
அதை நினைத்ததேயில்லை நீ..

எனக்கான
பிறரது கேள்விகளுக்கு;
பதில் சொல்லும் குரலாக
உன் குரல் மட்டுமே ஒலிக்கின்றது.

குனிந்து கொடுத்தே குறுகிப்போன
முதுகின் மேல்,
ஏற்றப்படுகின்றன
வேண்டியமட்டும் பாரங்கள்;

சுமந்தே களைத்துப்போன
என்னைக்காட்டி
பெருமையடிக்கிறாய்:
சுதந்திரமாய் வைத்திருப்பதாக!!!!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
இங்கே அளவுகோல்
வேறாக இருக்கும்வரை
எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..

16 comments:

  1. அருமை அமைதிச்சாரல்! கடைசி கேள்வி இன்னும் எனக்குள் எதிரொலிக்கிறது!

    ReplyDelete
  2. வாங்க சந்தனமுல்லை,

    அதை யோசித்ததால் வந்த சிந்தனைகளைத்தான் எழுதிட்டேன்ப்பா..

    வந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமை அமைதிச்சாரல்!

    ReplyDelete
  4. //சுதந்திரமாய் வைத்திருப்பதாக!!!!//

    //எதைச்சொல்வாய் நீ??
    உண்மையான சுதந்திரமென்று??!!!..//

    இதே கேள்வியைத்தான் நானும் எழுப்பியுள்ளேன் எனது இன்றைய பதிவில்!

    ReplyDelete
  5. வாங்க ராமலஷ்மி மேடம்,

    படித்தேன்.சீக்கிரமே விடைகிடைக்கும்ன்னு நம்புவோம்.

    வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  6. //ஆணுக்கும் பெண்ணுக்கும்
    இங்கே அளவுகோல்
    வேறாக இருக்கும்வரை
    எதைச்சொல்வாய் நீ??
    உண்மையான சுதந்திரமென்று??!!!..//

    எல்லாப்பெண்களின் மனசிலும் இருக்கிற கேள்வி...

    கவிதை அருமை அமைதிச்சாரல்!

    ReplyDelete
  7. வாங்க சுந்தரா,

    முதல்வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலும் கிடைச்சுடும்ன்னு நம்புவோம்.

    ReplyDelete
  8. மிகவும் அருமை ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. வாங்க பனித்துளி சங்கர்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க தியாவின் பேனா,

    முதல்வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. good..........
    supper....supper

    you come to my side
    I expect.......

    ReplyDelete
  12. வாங்க விடிவெள்ளி,

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. நீங்க சொல்லிட்டீங்க......

    ReplyDelete
  14. வாங்க கண்ணகி,

    விரைவில் மத்தவங்களும் சொல்வாங்க.

    நன்றிங்க.

    ReplyDelete
  15. குனிந்து கொடுத்தே குறுகிப்போன
    முதுகின் மேல்,
    ஏற்றப்படுகின்றன
    வேண்டியமட்டும் பாரங்கள்;

    கவிதை சூப்பர்!!!

    ReplyDelete
  16. வாங்க கவிதன்,

    நன்றிப்பா.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.