Pages

Wednesday, December 26, 2012

வலி மிகுந்த நேரம்....

சுயத்தை தொலைத்த
செயற்கை பூச்சுகளின் பின்னான முகம்
மறந்துதான் போகிறது.

எப்போதும் தயாராய்
சில முகமூடிகள்
மாட்டிக்கொள்ள தோதாய் .
தேர்ந்தெடுக்கும் குழப்பம்
எப்போதும் இருந்ததில்லை .

இருப்புக்கு தகுந்தாற்போல்
நொடிப்பொழுதில் மாறிவிடுகிறது,
பச்சோந்தியைவிட வேகமாக...;
எப்போதும் கிடைப்பவை
மலிவுவிலை புன்னகைகள் மட்டுமே.

சுமந்து திரியும் முகமூடிகள்
கழன்றுகொள்ளும் நேரங்கள்,
வலிமிகுந்ததாகவே இருக்கிறது
எப்போதும்!!!!

பொய்முகங்கள் தேவையில்லா
யாருமில்லா தனிவெளியில்,
கோரமாய் பல்லிளிக்கும் ;
ஒப்பனை கழுவப்பட்ட முகம்.

15 comments:

  1. //பொய்முகங்கள் தேவையில்லா
    யாருமில்லா தனிவெளியில்,
    கோரமாய் பல்லிளிக்கும் ;
    ஒப்பனை கழுவப்பட்ட முகம்.//

    அருமை

    ReplyDelete
  2. //சுமந்து திரியும் முகமூடிகள்
    கழன்றுகொள்ளும் நேரங்கள்//

    ஆம் வலி மிகுந்த நேரம்தான். அத்தனை
    வரிகளும் சாட்டையடி போல. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சாரல்.

    ReplyDelete
  3. வாங்க எல்.கே,

    நன்றிப்பா.

    ReplyDelete
  4. வாங்க ராமலஷ்மி,

    நன்றிங்க.

    ReplyDelete
  5. வாங்க அப்பாவி,

    நன்றிங்க.

    ReplyDelete
  6. //எப்போதும் கிடைப்பவை
    மலிவுவிலை புன்னகைகள் மட்டுமே.//

    ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  7. வாங்க ஆனந்தி,

    வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  8. வாழ்கையே வலியாக கவிதை.. தொடருங்கள்..

    அன்புடன்

    www.narumugai.com

    ReplyDelete
  9. வாங்க நறுமுகை,

    முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. இருப்புக்கு தகுந்தாற்போல்
    நொடிப்பொழுதில் மாறிவிடுகிறது,
    பச்சோந்தியைவிட வேகமாக...;///

    கேட்டால் சூதகமா நடந்துக்கனுமாம் ....
    இப்போதைய அறிவுரைகள் எல்லாம் நரியை போல் தந்திரமாக இரு என்று ...எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல்ல ...அசல் எது முலாம் பூசியது எது என்று கண்டுபிடிக்கவும் முடியல....

    ReplyDelete
  11. வாங்க ப்ரின்ஸ்,

    //அசல் எது முலாம் பூசியது எது என்று கண்டுபிடிக்கவும் முடியல//

    கண்டுபிடிக்க கூடாதுன்னுதானே முகமூடி போட்டுக்கிறாங்க :-(

    ReplyDelete
  12. நல்ல கவிதை...இதை படிக்கும் பொழுது நாசர் நடித்த ஒரு படம் நினைவிற்கு வருகிறது...

    ReplyDelete
  13. வாங்க ராசராசசோழன்,

    எந்த படம்ன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்.

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  14. ஆம். முதன்முதலில் எப்போது தொலைத்தோம் என்பது கூட நினைவிலில்லை.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.