Pages

Thursday, September 9, 2010

நகரமென்னும்...

அனுமதி கிடைத்ததும்
புற்றீசலாய் கிளம்பும் வாகனங்களினூடே
ஒரு கணம் தடுமாறி,
பின், தாமுமொரு ஈசலாய் பறந்ததுண்டா!!!

வழிப்பாதையில்,
அரை மில்லிமீட்டர் புன்னகையை..
தினம் பரிசளிக்கும் வேற்றுமுகத்தை;
அண்டை வீட்டினராய்
கண்டுபிடித்ததுண்டா!!!

துளசியும் மல்லிகையும்
தம் குணம் மாறி,
ஏதோவொரு மணத்தில்
தம்மிருப்பை தெரிவித்ததுண்டா!!!

விட்டு வந்த
வயலும் வீடும்;
குளமும்,...குயில் கூவும் தோப்பும்,
கனவுகளாய் இம்சிப்பதுவும்;
உதயங்களைக்காணும் ஆவல்
விடிந்து.. மறைவதுவும்,
செக்கிட்ட எள்ளாய் உள்ளம்,
திணறித்தெளிவதுவும்;
களிக்கவும், கழிக்கவுமான
பண்டிகைப்பொழுதுகளை
வரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...

ஏதேனும் ஒன்றை அனுபவித்திருந்தால்
உரக்கச்சொல்லுங்கள்;
நகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.


16 comments:

  1. //ஏதேனும் ஒன்றை அனுபவித்திருந்தால்
    உரக்கச்சொல்லுங்கள்;
    நகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.//
    கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. களிக்கவும், கழிக்கவுமான
    பண்டிகைப்பொழுதுகளை
    வரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான..///

    yammadi கைகுலுக்கிறது என்ன வாழ்க்கையே நகரத்ததக்குத்தான் பட்டிருக்கோம். :)

    ReplyDelete
  3. //விட்டு வந்த
    வயலும் வீடும்;
    குளமும்,...குயில் கூவும் தோப்பும்,
    கனவுகளாய் இம்சிப்பதுவும்;
    உதயங்களைக்காணும் ஆவல்
    விடிந்து.. மறைவதுவும்,
    செக்கிட்ட எள்ளாய் உள்ளம்,
    திணறித்தெளிவதுவும்;
    களிக்கவும், கழிக்கவுமான
    பண்டிகைப்பொழுதுகளை
    வரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...

    ஏதேனும் ஒன்றை அனுபவித்திருந்தால்
    உரக்கச்சொல்லுங்கள்;
    நகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.//

    ஆமாங்க ஒன்றுக்கு மேலாகவே அனுபவித்துக் கொண்டிருப்பதை உரக்கச் சொல்லுகிறேன். மிக அருமையான கவிதை.

    ReplyDelete
  4. உங்கள் வார்த்தைகள் மெருகேறி உள்ளன சகோதரி.. வாழ்த்துக்கள். அருமை

    ReplyDelete
  5. சாரல்...அனுபவித்து எழுதிய கவிதை.சொன்ன அத்தனையுமே உண்மை !

    ReplyDelete
  6. சாரல் சரம் சரமாய் தூவுகிறது அழகாய் கவிதையை.

    அருமையான கவிதை சாரல் அனுபவித்து உணர்வதுபோல்..

    ReplyDelete
  7. வாங்க மதுரை சரவணன்,

    வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  8. வாங்க முத்துலெட்சுமி,

    'வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டா' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது :-)))

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ராமலஷ்மி,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க எல்.கே,

    நன்றிப்பா..

    ReplyDelete
  11. வாங்க ஹேமா,

    ஆமாம்ப்பா.. நகர வாழ்க்கையின் ஒரு பகுதிதானே இது :-))))))

    நன்றி.

    ReplyDelete
  12. நீங்கள் சொன்னது சரிதான்..

    ReplyDelete
  13. வாங்க பிரகாஷ்(எ)சாமக்கோடாங்கி,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. வாங்க வசந்த்,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. //களிக்கவும் கழிக்கவுமான பொழுதுகளை...//

    யப்பா! உண்மையை அப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்ககளே!!

    உண்மைதான் அதுக்குத்தான் கழுத்தை நீட்டியிருக்கிறோம்.
    நல்லாருக்கு கவித.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.