Pages

Monday, September 20, 2010

உனக்கென்ன பிடிக்கும்??

மணாளனுக்கும், மக்கட்க்கும்
மதிப்பிற்குரிய மூத்தோருக்கும்
அவரவர் விருப்பத்தை
பரிமாறிய அன்னபூரணிக்கு
தன்விருப்பம் மறந்ததே நினைவில்லை..


திருப்தியான முகங்களிலேயே
சாபல்யமடைந்துவிடும் அவளிடம்;
யாரேனும் கேட்டிருக்கக்கூடுமோ
அவள் எதிர்பார்ப்பு என்னவென்று?


விசாரிப்புகளுக்கப்பாற்பட்டாலும்
ஏங்கியிருக்கக்கூடுமோ
மனத்தின்மூலையில் தவித்துக்கொண்டிருக்கும்
அந்தச்சிறுகுழந்தை..!!


கொள்ளாமல் நிரம்பிவழிந்தபோதிலும்,
என்றென்றும்
பாத்திரம் அறிந்ததில்லை
பதார்த்தத்தின் ருசி!!








31 comments:

  1. நல்ல கவிதை.

    //கொள்ளாமல் நிரம்பிவழிந்தபோதிலும்,
    என்றென்றும்
    பாத்திரம் அறிந்ததில்லை
    பதார்த்தத்தின் ருசி!!//

    அருமையாக உணர்த்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  2. //கொள்ளாமல் நிரம்பிவழிந்தபோதிலும்,
    என்றென்றும்
    பாத்திரம் அறிந்ததில்லை
    பதார்த்தத்தின் ருசி!!//

    :( நிஜமான நிஜம்...

    கவிதை சூப்பர்ங்க.

    ReplyDelete
  3. அமைதிசாரல்..எல்லா அம்மாக்களும் இதே தான்..நாமளும் கூட குழந்தையா இருக்கும்போது அம்மாக்கு இது பிடிக்குமான்னு யோசிச்சு பார்த்திருக்க மாட்டோம் இல்லையா?? அம்மா always இனிமை...உங்க கவிதை நல்லா இருந்தது...

    ReplyDelete
  4. //பாத்திரம் அறிந்ததில்லை
    பதார்த்தத்தின் ருசி!!//
    ரொம்ப நல்லாருக்கு சாரல் :)

    ReplyDelete
  5. /***
    பாத்திரம் அறிந்ததில்லை
    பதார்த்தத்தின் ருசி!!
    **/

    எதார்த்தம்..

    கவிதை அருமை..

    www.aaraamnilam.blogspot.com

    ReplyDelete
  6. வாங்க எல்.கே,

    அதேதான் :-)))

    நன்றி.

    ReplyDelete
  7. வாங்க ராமலஷ்மி,

    நன்றிங்க :-)

    ReplyDelete
  8. வாங்க சுந்தரா,

    நன்றிங்க.

    ReplyDelete
  9. வாங்க ஆனந்தி,

    சின்னப்புள்ளையில நமக்கு, செஞ்சுவெச்சா முழுங்கறதைத்தவிர வேறென்ன தெரியும் :-)))

    நன்றி.

    ReplyDelete
  10. வாங்க பாலாஜிசரவணன்,

    நன்றிங்க.

    ReplyDelete
  11. வாங்க அஹமது இர்ஷாத்,

    நன்றிப்பா..

    ReplyDelete
  12. வாங்க தியாவின் பேனா,

    முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  13. வாங்க அருட்புதல்வன்,

    உங்க தளத்துக்கும் போய்ப்பார்த்தேன்.. அத்தனையும் அருமை.

    நன்றி.

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா இருக்குங்க அமைதி சாரல்.

    ReplyDelete
  15. அம்மா எனறால் அன்பும் அன்னமும். மறக்க முடியாது. நல்லதொரு பெண்ணாய் இருந்து நல்லதொரு பெண்ணை வளர்த்தாலே போதும்.

    ReplyDelete
  16. சாரல்...பெண்களுக்கே உண்டான சாபம் அல்லது கொடுத்துவைப்பில் இதுவும் ஒன்று !

    ReplyDelete
  17. வாங்க கமலேஷ்,

    ரசிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete
  18. வாங்க தியாவின் பேனா,

    நன்றி..

    ReplyDelete
  19. வாங்க வல்லிம்மா,

    ரொம்ப சரியா சொன்னீங்க..ஹி..ஹி.

    நன்றிங்க.

    ReplyDelete
  20. வாங்க ஹேமா,

    அப்படித்தான் போலிருக்கு :-)))

    நன்றிங்க.

    ReplyDelete
  21. ஸ்வேதாக்கா,

    வருகை தந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  22. வாங்க அப்பாவி,

    தொலைதூரத்தில் இருக்கும்போதுதான் நமக்கு உண்மையிலேயே அம்மாவின் அருமை புரியுது..:-))))))

    நன்றி.

    ReplyDelete
  23. வாங்க வசந்த்,

    ரொம்ப நன்றி :-)

    ReplyDelete
  24. வாங்க நேசமுடன் ஹாசிம்,

    முதல்வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.