Pages

Friday, September 24, 2010

நிலவும், அவனும்..அவளும்..



நிலவில் தண்ணீர் இருக்கிறதாம்
விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
நிலவைப்பெண்ணென்று
யார் சொன்னது!!
அதுவும் ஆணாகத்தான்
இருக்க வேண்டும்.
'ஜொள்ளு வடிக்கிறதே!!
உனைப்பார்த்து'
என்றான் அவன்.

இல்லையில்லை;
அதுவும் என் போல் பெண்தான்;
சொந்தமாய் ஒளிவீச
திறனில்லாமல்,
சூரியக்கணவனை
சார்ந்திருக்க வேண்டியிருக்கும் பச்சாதாபத்தால்,
வடித்த கண்ணீர்தான் அது,
என்றாள் அவள்:

வாதம் வலுப்பதை பார்த்துக்கொண்டே;
இருவருக்கும் சாட்சியாய்,
மேகமுக்காட்டுக்குள்,
நகைத்தது, பால் நிலா...


டிஸ்கி: 'அன்புடன் மலிக்கா' அவங்க தளத்தில் நடத்திய கவிதைப்போட்டியில், எழுதியது இது :-)). நான் ரொம்பவே சுறுசுறுப்பு..போட்டி நடந்துமுடிஞ்சு மாசக்கணக்காவுது. இப்பத்தான் வெளியிடுறேன். எல்லாம் ஒரு கணக்குக்காகத்தான் :-)))))




23 comments:

  1. யப்பா.. ஈயம்,பித்தளையெல்லாம் எனக்குத்தெரியாது. தோணினதை எழுதுனேன் அம்புட்டுத்தான். நீங்க வேற கிளப்பிவிட்டுடாதீங்க :-)))))

    ReplyDelete
  2. சாரல்...ஏன் கவுஜன்னு லேபிள்?கவிதை அழகாய்த்தானே இருக்கு.கொஞ்சம் அழகுபடுத்தாலாம் !

    ReplyDelete
  3. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாயிருக்கு..பொருத்தமான படம்கூட..

    ReplyDelete
  5. பால் நிலா ஆண்பாலா, பெண்பாலா? ஹி..ஹி.. சும்மாத்தான்..

    நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  6. பால் நிலா ஆண்பாலா, பெண்பாலா? ஹி..ஹி.. சும்மாத்தான்..

    நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  7. வாங்க ஜெயந்தி,

    நன்றிங்க.

    ReplyDelete
  8. வாங்க ஹேமா,

    ஆமாம்ப்பா.. சிலசமயங்களில் இன்னும் கொஞ்சம் டிங்கரிங் செஞ்சா இன்னும் கொஞ்சம் நல்லாருக்குமோன்னு தோணும். கவிதை அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு நன்றி :-))))

    ReplyDelete
  9. வாங்க ஜெய்லானி,

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி சகோ :-))

    ReplyDelete
  10. வாங்க அஹமது இர்ஷாத்,

    நன்றிப்பா..

    ReplyDelete
  11. வாங்க பாலாசி,

    அம்புலிமாமான்னும் சொல்லுவாங்க, நிலாப்பெண்ணேன்னும் சொல்றாங்க. எது சரின்னு அந்த நிலாகிட்டயே கேக்கலாம்ன்னா.. மேகத்துக்குப்பின்னால ஒளிஞ்சிக்கிடுச்சே :-))))))

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. நல்ல அழகான கவிதை.. திரும்பத் திரும்ப படிக்க படிக்க அழகு.

    ReplyDelete
  13. நிலவை பத்தி யார் எதை சொன்னாலும் பிடிக்குது அமைதி ..

    அந்த படம் அவ்ளோ அருமை

    ReplyDelete
  14. வாங்க ஸ்டார்ஜன்,

    படிச்சு ரசிச்சதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  15. வாங்க பத்மா,

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  16. நல்லாயிருக்கு.

    ReplyDelete
  17. பால் நிலா பசுமை மாறாமல்... சூப்பர்.. :-))
    வாழ்த்துக்கள்.. அருமையா இருக்கு..!!
    (நா கமெண்ட் போடறதுல என்னா சுறுசுறுப்பு பாருங்க.. )

    ReplyDelete
  18. வாங்க தியாவின் பேனா,

    நன்றிங்க.

    ReplyDelete
  19. வாங்க ஸ்வேதா,

    நன்றிங்க.

    ReplyDelete
  20. வாங்க ஆனந்தி,

    நன்றிங்க..

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.