Pages

Monday, July 25, 2011

நழுவிச்செல்லும் காலம்..


ஆழ்நிலைக்கனவுகளொன்றில்
பிடிமானத்துக்காய்
துழாவிய கைகளில்
சிக்காது விளையாடுகின்றன;
எப்போதோ
நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
நினைவுகள்,
பெருங்கனவின் தணியாவெப்பத்தில்
காலாவதியாகுமுன்
காலம் நகர்த்திச்சென்ற
படகொன்றில்
துடுப்பசைத்துச்செல்கின்றன
தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)

33 comments:

  1. நினைவுகள் துடுப்பசைத்துச் செல்வது அற்புதம்.வாழ்த்துகள் சாரல் !

    ReplyDelete
  2. வாங்க ஹேமா,

    கருவிப்பட்டை இல்லாம கடை காத்தாடுற இந்த நேரத்துல, பின்னூட்டமிட்டு ஆறுதலளிச்சதுக்கு நன்றி :-)))

    ReplyDelete
  3. பயணித்துச் செல்லும் நினைவுகளின் ஆராதனை அழகு

    ReplyDelete
  4. //துழாவிய கைகளில்
    சிக்காது விளையாடுகின்றன;//...excellent
    //எப்போதோ
    நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த//
    கனவுகளில் உள்ள காட்சிகளை வெளிபடுத்தமுடியாமல் தவிப்பவருக்கு விஞ்ஞான ரீதியான கவிதை அற்புதங்க வாழ்த்துக்கள்... really superb

    ReplyDelete
  5. நழுவிசெல்லும் காலம் கனவுகளை விட்டு அகலாமல்...கனவுகளில் மட்டும்

    ReplyDelete
  6. வாங்க பாசமலர்,

    பாசமான உங்க கருத்துக்கு நன்றி :-)

    ReplyDelete
  7. வாங்க மாய உலகம்,

    ரசிச்சு வாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி..

    ReplyDelete
  8. துழாவிய கைகளில்
    சிக்காது விளையாடுகின்றன;

    அருமையான கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. கவிதை ஒரு மௌனராகம்

    அருமை!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. அருமையான கவிதை வாழ்த்துக்கள் .
    என் தளத்தில் இன்று ஒரு பாடல்
    எழுத்துருவில் வெளியாகி இருக்கின்றது
    முடிந்தால் அதற்க்கு உங்கள் கருத்தினை
    வழங்குங்கள் .மிக்க நன்றி இப் பகிர்வுக்கு....

    ReplyDelete
  11. வல்லமையில் வெளிவந்த.... அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  12. நல்ல கவிதை சகோ .அருமை

    ReplyDelete
  13. நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
    பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
    நினைவுகள், ... அருமையான கவிதைக்குநன்றி

    ReplyDelete
  14. ''..சிக்காது விளையாடுகின்றன;
    எப்போதோ
    நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
    பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
    நினைவுகள்,..''
    Nalla vatikal..
    Vetha. Elangathilakam
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  15. காலம் நகர்த்திச்சென்ற
    படகொன்றில்
    துடுப்பசைத்துச்செல்கின்றன
    தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..
    ஆஹா.. அருமையாய் வந்திருக்கிறது.

    ReplyDelete
  16. >>அமைதிச்சாரல் said...

    வாங்க ஹேமா,

    கருவிப்பட்டை இல்லாம கடை காத்தாடுற இந்த நேரத்துல, பின்னூட்டமிட்டு ஆறுதலளிச்சதுக்கு நன்றி :-)))

    ஹா ஹா .. திரட்டிகள் இல்லா விட்டல் என்ன , ரெகுலர் வாசகர்கள் வருவார்களே!!!!!!!!!!!

    ReplyDelete
  17. ரொம்ப நல்ல வார்த்தையமைப்பு. கனவு கைகூடும் காலத்துக்கான காத்திருப்பு அற்புதம்.

    ReplyDelete
  18. வாங்க விடிவெள்ளி,

    வாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  19. வாங்க விடிவெள்ளி,

    வாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  20. வாங்க புலவர் ஐயா,

    வாசிச்சதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  21. வாங்க அம்பாளடியாள்,

    ரொம்ப அருமையா இருக்குதுப்பா உங்க கவிதைகளெல்லாம்..

    ReplyDelete
  22. வாங்க ஆனந்தி,

    ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு..

    ReplyDelete
  23. வாங்க எம்.ஆர்,

    வாசிச்சதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  24. வாங்க மாலதி,

    வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  25. வாங்க மாலதி,

    வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  26. வாங்க வேதா,

    வாசிச்சு கருத்திட்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  27. வாங்க ரிஷபன்,

    ரசிச்சதுக்கு நன்றி :-)

    ReplyDelete
  28. வாங்க சிபி,

    ஹி..ஹி.. ரெகுலர் நண்பர்கள் வருவாங்கதான். ஆனா, புதிய நட்புகளின் கண்ணுல பட கருவிப்பட்டை வேணுமே :-)

    ReplyDelete
  29. வாங்க கீதா,

    ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

    ReplyDelete
  30. வாங்க கீதா,

    ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

    ReplyDelete
  31. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  32. வாங்க தமிழ்த்தோட்டம்,

    வாசிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.