Pages

Thursday, December 15, 2011

வீடென்பது...


(படம் பிடிச்ச என்னோட காமிராவுக்கு நன்றி :-))
அவனும் அவளுமான சிற்றோடைகள்
கை கோர்த்து நடந்த
பாதச் சுவடுகள் பற்றி நடந்த சிறு நதிகள்
சங்கமமாயின வீடெனும் கடலில்..
வீடெனும் சொல்
திறந்து விட்டு விட்ட
நினைவுப் பேழையினுள் அமிழ்ந்து கிடந்த
ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பினூடே,
கீற்றுத்துண்டாய் வெட்டி மறைகிறது
கம்பிகளினூடே வெயிலில்
பிடிவாதமாய் நனையும் மருதாணிப்பூக்கள்
வாசலில் வரைந்த வாசனைக்கோலம்..
பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்
கைப்பிடித்து நலம் விசாரித்துச் செல்கின்றன
இப்போதாவது வந்தாயாவென..
தனக்கென்றதோர் கூடாயும்
அன்னியோன்னியமாயும் இருந்து வந்து,
அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்
உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)

30 comments:

  1. பூட்டிய வீட்டிற்குள் புதையலாக ஊடாடும் நினைவுகள் வெகு அழகு.
    அருமையான சொற்குவியல். வாழ்த்துகள் சாரல்.

    ReplyDelete
  2. நினைவுகளின் சங்கமம். கவிதை ரொம்ப நல்லாருக்கு சாந்தியக்கா.

    ReplyDelete
  3. உரித்தெரியப்பட்ட பாம்புச்சட்டை - புறக்கணிக்கப்பட்டப் பரம்பரை வீட்டுக்கு இதைவிடவும் பொருத்தமான உவமை இருக்கமுடியுமா என்று வியக்கிறேன். புலம்பெயர் நிர்ப்பந்தமோ, பொருளாதார நிமித்தமோ, நாகரிகத்தின் வளர்ச்சியோ, நகரவாழ்க்கையின் மோகமோ எதுவாகவேனும் இருக்கட்டும். ஆனால் பூட்டப்பட்ட வீடுகளின் பின்னே இருக்கும் நினைவுச்சுவடுகளின் தாக்கம் வெகு அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. தளத்திற்கு என் முதல் வருகை..அழகான கவிதை சகோ..வாழ்த்துகள்..வருகையை எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  5. படத்தில் உள்ள வீடு ரொம்ப நல்லாருக்கு.. ஊரில் உள்ள உங்க வீடா?..

    ReplyDelete
  6. அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்
    உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்
    வீசப்பட்ட பின்னர்
    அன்னியப் பட்டும் நிற்கிறது
    வீடென்பது சிலருக்கு //.

    ஒருசிறு சொற்றோடருக்குப் பின் தான்
    எத்தனை ஆழமான பொருள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  7. /பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே
    ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்/

    உணர்வுப் பூர்வமான கவிதை சாரல். மிக அருமை.

    ReplyDelete
  8. வீடென்பது....வாழ்வின் நெம்புகோல்.உயிர்நாடி...இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.எங்கள் குடிசைச் சுவர்களைத் தொலைத்து வீடற்றுத் திரியும் எங்களிடம் கேளுங்கள்.அற்புதமான கவிதை !

    ReplyDelete
  9. அற்புதமான அழகான உணர்வுகள் கொண்ட கவிதை சாந்தி [யக்கா]

    ReplyDelete
  10. சட்டென்ற திருப்பமாக அந்தக் கடைசி வரிகள்....ரசித்தேன்..

    ReplyDelete
  11. வீசப்பட்ட பின்னர்
    அன்னியப் பட்டும் நிற்கிறது
    வீடென்பது சிலருக்கு.

    ReplyDelete
  12. அருமையான வரிகள்

    ReplyDelete
  13. அழகான கவிதை .பகிர்வுக்கு மிக்க நன்றி
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  15. அன்னியப் பட்டும் நிற்கிறது
    வீடென்பது சிலருக்கு.
    >>>
    வீடிற்கு மனதில்லை என்ற எண்ணத்தில்....

    ReplyDelete
  16. வாங்க வல்லிம்மா,

    ரொம்ப நன்றிம்மா வரவுக்கும் வாசிச்சதுக்கும்.

    ReplyDelete
  17. வாங்க ஸ்டார்ஜன்,

    அது எங்க வீடில்லைப்பா.ரிட்டையர்மெண்டுக்கு அப்றம் செட்டிலாகலாமேன்னு யோசிச்சு அங்கே போய் பார்த்தோம். ரொம்பவே தூரத்துல இருக்குது. திருனேலிக்கு பக்கத்துல 'ஷிபா'கட்டுறாங்க. விவரம் இந்த சுட்டியில் இருக்கு.

    http://shifahousing.com/index.php?option=com_content&task=view&id=14&Itemid=32

    வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  18. வாங்க கீதா,

    வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  19. வாங்க மதுமதி,

    முதல் வருகைக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றி சகோ :-)

    ReplyDelete
  20. வாங்க செல்வம்,

    வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)

    ReplyDelete
  21. வாங்க ரமணி,

    வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)

    ReplyDelete
  22. வாங்க சௌந்தர்,

    வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

    ReplyDelete
  23. வாங்க சௌந்தர்,

    வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

    ReplyDelete
  24. வாங்க ராமலஷ்மி,

    வாசிச்சதுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  25. வாங்க ஹேமா,

    காலம் எப்போதும் இப்படியே இருந்துடறதில்லை. கண்டிப்பா விடியும். நம்பிக்கையோடிருப்போம்.

    வாசிச்சதுக்கு நன்றி :-)

    ReplyDelete
  26. வாங்க மலிக்கா,

    வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :-)

    ReplyDelete
  27. வாங்க பாசமலர்,

    பாசத்துடன் அளித்த கருத்துக்கு ரொம்ப நன்றி :-)

    ReplyDelete
  28. வாங்க சசிகலா,

    வாசிச்சதுக்கும் வரவுக்கும் ரொம்ப நன்றிங்க :-)

    ReplyDelete
  29. அருமையான கவீதை வாழ்த்துகள்

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.