கோபம் ஏற்படுத்தும்போது
விலகி நடக்கவும்
பிரியத்தைக்கொட்டும்போது
ஏந்திக்கொள்ளவும்
தனிமைத்தவத்தில்
நிச்சலத்துடனிருக்கவும்
மகிழ்வில் ஆர்ப்பரிக்கவும்
பிரிவேற்படும்போது சகித்துக்கொள்ளவுமென
எல்லாம் பழகிக்கொண்டாயிற்று
ஆயினும்,
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பமாய்
துளிர் விடும் கண்ணீரை
என்ன செய்வதென்றுதான்
இன்னும் பிடிபடவில்லை
போகட்டுமென அதில் கரைந்து விடுவதைத்தவிர..
true
ReplyDeletethe reason is we are not buddhhas mahavir or ramana maharishi....
அருமையான கவிதை.
ReplyDeleteஉணர்வுப் பூரணமான, மிக அருமையான கவிதை.
ReplyDeleteஒரு சின்ன பிழைத் திருத்தம்
நிச்சலத்துடனிருக்கவும் ==> நிச்சலனத்துடனிருக்கவும் !
வாழ்த்துகள்!
வாங்க சந்திரகுமார்,
ReplyDeleteநிச்சலம் எனில் அசைவின்மை, உறுதி, நித்தம், நித்தியத்துவம், முழுப்பட்டினி எனப் பல பொருள் உண்டு என அகராதி சொல்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
ReplyDeleteமிக்க நன்றி.
வாங்க சந்தர்,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.