புரியாத புதிரொன்றில்
மூழ்கி முத்தெடுத்து
மூச்சு முட்டி வெளியே வந்தேன்;
மறுபடியும் சிரித்து வைக்கிறாயே!!
இன்னொரு புதிராக;
திக்குமுக்காடிப்போகிறேன் நான்....
கன்னம்தொட்டு நீர் துடைத்து,
மடி தந்த அக்கணத்தில்;
மகளே,
தாயுமானாய் நீ;
கரைந்து போகிறேன்...
உயிரைப்பிய்த்துக் கொடுத்தபின்னான
வலியின் காயத்திற்கு
புன்னகை மருந்திடும்
இறக்கைகளில்லா செல்லதேவதை நீ;
லேசாகிப்போகிறேன்...
பாசமுடன் பாசாங்கும்காட்டி
பிரிந்து சென்ற
உன் இருப்பை உணர்த்திச்செல்கிறது,
வெற்றுக்கூட்டில் எதிரொலிக்கும்
நிசப்தமான கொலுசொலி;
எனது வெறுமைக்கு துணையாக..
பெருமூச்செறிகிறேன்......
(படம்: சுட்டது:-))

//(படம்: சுட்டது:-)) //
ReplyDeleteபடம் மட்டுமா இல்லை கவுஜையுமா ?
வாங்க நசர்,
ReplyDeleteபடம் மட்டும்தான் :-)))
கவுஜையை சிந்தனையில் சுட்டேன். நல்லா வ(வெ)ந்திருக்கா :-))))
பட செலக்சன் கிளாசிக்.. அந்தகுழந்தையின் உடல் முழுவதும் பொங்கி விழும் இலைகளை பார்த்து கொண்டே இருக்கிறேன் நல்ல ரசனை மேடம் உங்களுக்கு..
ReplyDeleteமகளை படிக்க ஹாஸ்டலுக்கு அனுப்பிவிட்டீர்களா?
வாங்க வசந்த்,
ReplyDeleteபடம் பிடிச்சிருக்கா!!..ஆஹா!! சந்தோஷம்..
கவுஜ படத்தைப்பாத்துதான் வந்தது :-))
கவிதை கவிதை
ReplyDeleteசாரல், ஏன்னா அச்சு, வர வர இரவ நேரத்தில்தான் அதிகம் இருக்கீங்க, எதாவது வெளிநாடு போயாச்சா ??
வாங்க எல்.கே,
ReplyDeleteமழைகாரணமா வலை சிலசமயம் தகராறு செய்யுது. அதான் வலையுள்ளபோதே வீசிக்கொள்கிறேன்.இப்போதைக்கு நான் போன ஒரே வெளிநாடு கன்யாகுமரிதான்.எல்லாவிதமான நாட்டுமக்களும் இருக்கிறாங்க இல்லியா :-)))))
//மழைகாரணமா வலை சிலசமயம் தகராறு செய்யுது. அதான் வலையுள்ளபோதே வீசிக்கொள்கிறேன்.இப்போதைக்கு நான் போன ஒரே வெளிநாடு கன்யாகுமரிதான்.எல்லாவிதமான நாட்டுமக்களும் இருக்கிறாங்க இல்லியா :-))))///
ReplyDeletesari sari.. illa only nite timethan unga commentslam varuthu athan ketten
//கன்னம்தொட்டு நீர் துடைத்து,
ReplyDeleteமடி தந்த அக்கணத்தில்;
மகளே,
தாயுமானாய் நீ;
கரைந்து போகிறேன்...//
கரைந்தது! எங்களின் இதயமும் தான்,,
//வெற்றுக்கூட்டில் எதிரொலிக்கும்
ReplyDeleteநிசப்தமான கொலுசொலி;
எனது வெறுமைக்கு துணையாக..//
அருமையான வெளிப்பாடு. நெகிழ்வான கவிதை.
வாங்க ப்ரின்ஸ்
ReplyDeleteநன்றி வரவுக்கு.
வாங்க ராமலஷ்மி,
ReplyDeleteஇந்த உணர்வை அனுபவிக்காதவர்களே இருக்கமுடியாது எனலாம்...இல்லியா!!
நன்றி.
//வெற்றுக்கூட்டில் எதிரொலிக்கும்
ReplyDeleteநிசப்தமான கொலுசொலி;
எனது வெறுமைக்கு துணையாக..//
அழகிய வரிகள் சூப்பர்.
சாரல் சுகமாய் அடிக்குது..
நன்றாக இருக்கிறது நண்பரே...வாழ்த்துக்கள்...
ReplyDeletemakalaip patriya kavithai...urukkam-meerapriyan
ReplyDeleteவாங்க மலிக்கா,
ReplyDeleteசாரலில் நனைஞ்சதுக்கு நன்றிங்க.
வாங்க கமலேஷ்,
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க மீராப்ரியன்,
ReplyDeleteஅந்த உறவே உருக்கமும் நெகிழ்வும் கலந்ததுதானே.
முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
முதல் வணக்கம் சாரல்
ReplyDeleteதிக்குமுக்காடித் திணறலோடு தொடங்கிய கவிதை ஏன் நிசப்தமாகியது !
கவிதை நெகிழ்வு.
பாச உணர்வை மென்மையாக சொல்லும் அழகான கவிதை..
ReplyDelete//வலியின் காயத்திற்கு
புன்னகை மருந்திடும்
இறக்கைகளில்லா செல்லதேவதை நீ; //
மிக அழகான வரிகள்..
வாங்க ஹேமா,
ReplyDeleteவெற்றுக்கூட்டில் நிசப்தம் மட்டும்தானே இருக்கும்...
நன்றி.
வாங்க வைகறை நிலா,
ReplyDeleteமுதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.