Pages

Friday, November 19, 2010

ஒளிமழையில்...

மழையாய்ப்பொழியும்
நட்சத்திரங்கள்...
இருகரம் நீட்டி ஏந்தணும்;
ஊற்றுக்கண் திறந்த நெருப்பூற்றின்..
ஆரவாரத்தில் மகிழணும்..
காதுவலிக்க வெடிக்கவில்லை,
கந்தகப்புகை உண்டென்றாலும்;..
கவனமாய்க்கொஞ்சம் இருக்கணும்.

மூணாம் மாடியில் பாய்ந்ததினால்
மறுக்கப்பட்டது
ராக்கெட்டேயன்றி,..
எங்கள் மகிழ்ச்சியல்ல;
சிறுபொறியில்தான் ஆரம்பிக்கிறது
எந்தவொரு ஆர்ப்பரிப்பும்..

சூழலைமட்டும் கவனித்து
பட்டாசாய் வெடிக்கும் கனவான்களே..
எங்களையும்
ஒரு நிமிடம் நினையுங்களேன்.
காணாமற்போய்க்கொண்டிருக்கின்றன,
ஒவ்வொரு சந்தோஷமாய்;
எங்களுக்கான உலகத்திலிருந்து
பாம்புமாத்திரையாய்..

நாளைய கவலையில்
இன்றை மறந்திடாமல்,..
ஒளிமழையில் நனைந்திடவே,
நானும்தான் வாரேன்..
ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக்கோ...





17 comments:

  1. //சிறுபொறியில்தான் ஆரம்பிக்கிறது
    எந்தவொரு ஆர்ப்பரிப்பும்..//

    அருமை.

    நல்ல கவிதை சாரல்.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு சாரல் சகோதரி...:))

    ReplyDelete
  3. சிறு பொறியில்தான்....பாம்பு மாத்திரை வரிகளை ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  4. நல்ல கவிதைங்க.......வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாங்க ராமலஷ்மி,

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க ஆனந்தி,

    நன்றிங்க..

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம்,

    ரசித்ததுக்கு நன்றி :-)

    ReplyDelete
  8. வாங்க பத்மா,

    நன்றிங்க :-))

    ReplyDelete
  9. வாங்க நி.சி.முத்து,

    நன்றிங்க :-))

    ReplyDelete
  10. அழகான கவிதை சாரல், ரசித்தேன்.

    ReplyDelete
  11. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  12. சிறுபொறியில்தான் ஆரம்பிக்கிறது
    எந்தவொரு ஆர்ப்பரிப்பும்..
    கவிதையும் கூட!

    ReplyDelete
  13. வாங்க சுந்தரா,

    ரசித்ததுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  14. வாங்க மாதேவி,

    நன்றிங்க..

    ReplyDelete
  15. வாங்க ரிஷபன்,

    சரியா சொன்னீங்க..

    நன்றி.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.