Pages

Wednesday, November 24, 2010

தீர்வும், தெளிவும்..

சிக்கித்தவிக்கும் நினைவுகள்
மனதின் இடுக்குகளில்,
பிய்த்தெறியமுடியா சிடுக்குகளாய்;
எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு.

இனம்புரியா சஞ்சலங்கள்,
விடாது பின்வரும் நிழலைப்போல்
கேள்விகள்,
துரத்திக்கொண்டிருக்கும்;
இன்னவென்று புரிபடாத பதில்களை..

புரிந்துகொள்வதற்கும்
புரியவைப்பதற்குமான இடைவெளியில்,
நூலாம்படையுடன் காலம்..
விழுங்கக்காத்திருக்கும் வாய்பிளந்த சிலந்தியென.

கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..

டிஸ்கி: இந்தக்கவிதை திண்ணையில் வெளிவந்துள்ளது.. 




21 comments:

  1. தீர்வு நல்லா இருக்கு

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க.....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
    கனவில் கிடைத்த தீர்வில்,
    கழுவி விடப்பட்ட வானமாய்
    மனம்..//

    சூப்பர்ப்


    வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
  4. அருமையான கவிதை அமைதிச்சாரல்.

    //கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
    கனவில் கிடைத்த தீர்வில்,
    கழுவி விடப்பட்ட வானமாய்
    மனம்..//

    தீர்வில் பிறந்த தெளிவு அழகு.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கவிதை ரொம்ப நல்லாருக்கு அமைதிக்கா..

    ///கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
    கனவில் கிடைத்த தீர்வில்,
    கழுவி விடப்பட்ட வானமாய்
    மனம்..///

    சூப்பர் வரிகள். நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சிலசமயங்களில் கனவில் தீர்வு கிடைப்பது உண்மைதான் சாரல் !

    ReplyDelete
  8. அருமையான தீர்வு சாரல்!

    ReplyDelete
  9. தீர்வுகள் கனவில்தான் கிடைக்கின்றன.

    நனவு வாய்தா வாங்கிக்கொண்டேயிருக்கிறது.

    ReplyDelete
  10. புரிந்துகொள்வதற்கும்
    புரியவைப்பதற்குமான இடைவெளியில்,
    நூலாம்படையுடன் காலம்..
    விழுங்கக்காத்திருக்கும் வாய்பிளந்த சிலந்தியென.

    ஆஹா!

    ReplyDelete
  11. வாங்க எல்.கே,

    தீர்வு பிடிச்சிருக்கா :-))))

    நன்றி.

    ReplyDelete
  12. வாங்க நி.சி.முத்து,

    நன்றிங்க..

    ReplyDelete
  13. வாங்க வசந்த்,

    நன்றிங்க..

    ReplyDelete
  14. வாங்க ராமலஷ்மி,

    நன்றிங்க..

    ReplyDelete
  15. வாங்க KANA VARO,

    வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  16. வாங்க ஸ்டார்ஜன்,

    தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது கூட கனவில் வந்த ஐடியாவால்தானாம் :-)


    நன்றி..

    ReplyDelete
  17. வாங்க ஹேமா,

    கரெக்ட்டுப்பா.. அறிவியல்லயே நிறைய உதாரணங்கள் இருக்கு. உதாரணமா,.. molecular structure of benzene.

    வாழ்க்கைக்கான தீர்வுகளும்கூட சிலசமயங்களில் கிடைக்கத்தான் செய்யுது..

    நன்றி.

    ReplyDelete
  18. வாங்க சுந்தரா,

    நன்றிங்க.

    ReplyDelete
  19. வாங்க நானானிம்மா,

    நன்றிம்மா..

    ReplyDelete
  20. வாங்க ரிஷபன்,

    நன்றிங்க..

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.