Pages

Wednesday, December 1, 2010

ஓயாதகடலொன்று...

வீட்டை நிறைக்கும்
மழலைப்புன்னகையென
சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே,
கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய் 
ஓடிச்சென்று மறைகின்றன 
கொழுத்த நண்டுகள்..
ஆதரவான தகப்பனைப்போல் 
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;
கொண்டு வந்து சேர்க்கிறது 
கடலின் வாசத்தை..
இன்னொரு நாளை 
முடித்த நிறைவில்
 நாள் முழுதும் உழைத்த களைப்பில்;
மறைந்த ஆதவன்,
உதிக்கிறான் ஒரு குழந்தையின் கையில்
பலூனாய்..
வீடு வந்து சேர்ந்தபின்னும் 
அலையடித்துக்கொண்டிருக்கிறது 
கடல்,
உடையிலிருந்து உதிரும்
குறுமணலுடன்..
கால் நனைக்கவென்று மட்டுமல்லாமல்
எல்லாவற்றுக்குமான விருப்பமாய்...

இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி...



20 comments:

  1. திண்ணை நல்லா இருந்தா சரிதான்

    ReplyDelete
  2. இயற்கையை ரசித்த அழகான கவிதை சாரல்.திண்ணையில் வாசித்தேன் !

    நசர்....!

    ReplyDelete
  3. நாசர், திண்ணை ஒன்னும் ஆகிறது தம்பி..

    திண்ணையில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //ஆதரவான தகப்பனைப்போல்
    கேசம் கலைத்துச்செல்லும் காற்று;// மிகவும் ரசித்தேன் அமைதிச்சாரல்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ரொம்ப அழகு கவிதை :)

    ReplyDelete
  6. //ஆதரவான தகப்பனைப்போல்
    கேசம் கலைத்துச்செல்லும் காற்று;//

    இதமான வரிகளுடன் அழகானதொரு கவிதை, அலைகளின் சங்கீதம் பின்னணியில் ஒலிக்க..!

    திண்ணையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் சாரல்.

    ReplyDelete
  7. வாங்க நசரேயன்,

    திண்ணைக்கு ஒண்ணும் ஆகலை, திடகாத்திரமா இருக்கு :-))

    கும்மியை ஆரம்பிச்சதுக்கு நன்றி :-)

    ReplyDelete
  8. வாங்க ஹேமா,

    நன்றிங்க..

    பிரிக்கமுடியாதது என்னவோன்னு கேட்டா நசரும் கும்மியும்ன்னு தயங்காம சொல்லலாம் :-)))))))

    ReplyDelete
  9. வாங்க எல்.கே,

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க ஸாதிகா,

    ரசித்ததுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  11. வாங்க பாலாஜி,

    நன்றிங்க..

    ReplyDelete
  12. வாங்க ராமலஷ்மி,

    நன்றிங்க..

    ReplyDelete
  13. வீடு வந்து சேர்ந்தபின்னும்
    அலையடித்துக்கொண்டிருக்கிறது
    கடல்//

    அழகான கவிதை.

    ReplyDelete
  14. வாங்க வெறும்பய,

    நன்றிங்க..

    ReplyDelete
  15. வாங்க ரிஷபன்,

    நன்றி சகோ..

    ReplyDelete
  16. ரசித்து எழுதி இருக்கீங்க அமைதிச்சாரல்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. வாங்க ஸாதிகா,

    எவ்வளவு ரசிச்சாலும் தீரமாட்டேங்குதே :-))

    நன்றி.

    ReplyDelete
  18. அழகான உணர்வுகள்
    அருமையான கவிதை.

    ReplyDelete
  19. வாங்க கல்பனா,

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.