ஆடிக்கொண்டிருக்கிறது ஊஞ்சல்
இப்பக்கமோ அன்றி அப்பக்கமோ
அல்லால் எப்பக்கமோ
ஊழைக்கடந்து உப்பக்கம்
நுழையப்போந்தவன்
தன்னிலை மயங்கிச்சோர்ந்து
ஒத்திசைந்தாடிக்கொண்டிருக்கிறான்
நிலைக்கு வந்தபின் அவ்வூஞ்சல்
எப்பெயரைச் சூடிக்கொள்ளுமோ!
பிரிமுறுக்கின் விசை தளரும்வரை
சுழலும் பம்பரத்தை
ஆட்டுவிக்கும் சாட்டையின்
தப்பாத தாளத்துக்கேற்ப
தப்படிகள் வைத்தாடுபவனிடமிருந்து
உருவி உருண்டோடும் ஒரு சலங்கை மணி
நிறுத்துகிறது ஆட்டத்தை
இயங்கும் வரைதான் இயந்திரம்
சும்மா இருந்தால் சவமென்பர்.
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.