Pages

Friday, August 14, 2020

நல்லாச்சி

ஈ பாஸில் ஊர் வந்த
பேத்தி அளித்த முகக்கவசத்தோடு
ஆயிரத்தெட்டு அறிவுரைகளையும்
செவியிலணிந்து கொண்டிருக்கிறாள் நல்லாச்சி
சமூக விலகல் மிக அவசியமென்று
தொழுவத்து மாடுகளைக்கூட
விலக்கிக் கட்டச்சொன்ன
பேத்தியின் ஆணையை
சிரிப்புடன் சிரமேற்கொண்டு
நிறைவேற்றியவள்
அவளின் ஒரு கேள்வியால்
தடுமாறிக்கொண்டிருக்கிறாள்.
கோவில் யானையை
முகக்கவசமணியச்சொன்னால்
என்ன செய்யும்? எப்படி அணியும்?

1 comment:

  1. ஆஹா...அற்புதம்..குழந்தை வியக்கும் அதிசயமும்...அறிந்தும் இழந்த பச்சாதாபமும்.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.