Pages

Friday, August 6, 2021

நல்லாச்சி

எண்ணங்களைத் தடையின்றிப் பகிர
இடுக்கண் வருங்கால் 
தோள்கொடுக்க
சுகதுக்கங்களை சேர்ந்து அனுபவிக்க
அமையும் நட்புகள் 
உறவாய் மலர்வதுண்டு
உறவுகளுக்குள் நட்பு பூப்பதுமுண்டு
இழையும் மூச்சென என்னுடனிருக்கும்
நீயுமென் தோழமையே
என்றுரைத்த நல்லாச்சியை
அதிசயித்த பேத்தி
ஆச்சியின் விளக்கத்தால்
ஆச்சர்யங்கொள்கிறாள்
தோழமையை ஆசீர்வதித்துத் தூவுகிறது
பொன்னந்திச்சாரல்.

No comments:

Post a Comment

கவிதை சொன்னவர்கள்.