எல்லாவற்றையும் மறந்துவிட்டு
புதிதாய் ஆரம்பிக்கலாம் என்கிறீர்கள்
மறப்பதை விட
அத்தனையையும் அழித்து விட முடிந்தால்
அது மிக இனிதாயிருக்கும்
இருப்பினும்
பதிந்த நினைவுகளின் ரணம்
தழும்புகளாய் உறுத்தியபடிதானிருக்கும்
எதையெல்லாம் மறப்பதென்பதையும்
எங்கிருந்து அழிக்கப்பட வேண்டுமென்பதையும்
அறுதி செய்து விட்டு
புத்தம் புதிய வானின் கீழ்
புதுக்கருக்கழியாத பூமியின் மடியில்
புது மலர்களாய்ப் பூக்கலாம்
அது வரை
அவரவர் எல்லை அவரவர்க்கு.
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.