Pages

Tuesday, December 7, 2021

ஏகாந்தம் இனிது


மலருந்தோறும்
கொய்து கொண்டு போய்விடுகிறாயே சின்னக்குருவியே
உன் பின்னவன் உறும் ஏமாற்றம்
உணர்வாயா நீ
பொறுமையாய் ஊர்ந்து வந்துகொண்டிருக்கும்
இந்த வெயில் புசிக்கவென
ஒன்றிரண்டோ
துழாவித்துழாவி பரிதவிக்கும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கென சிலவோ
எதுவுமின்றி
கொறித்துச் சிதறடிக்கும் நீ
நானுமொரு தாவரமென
எண்ண விடாது
துளிர்க்குந்தோறும் துடைத்துச்செல்
ஏகாந்தமாயிருப்பேன்.

No comments:

Post a Comment

கவிதை சொன்னவர்கள்.