பசிக்கும்ல
பேத்திக்கும்
கண்ணாடித்தொட்டி மீனுக்கும்
அவரவர் உணவைப்
பரிமாறிச்செல்கிறாள் நல்லாச்சி
வெளிப்புறத்தில்
பேத்தி விரல் பதித்தெடுக்கும் இடமெல்லாம்
ஓடோடி வந்து
வாயைக் குவித்துக்குவித்து
முத்துகிறதொரு சிறுமீன்
அதற்கும் அவளுக்குமான
சிறுவிளையாட்டின் போது
தொட்டிச்சுவரில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது
அன்பின் முகவரி
மனம் நிறைவதே
எல்லாம் நிறைந்தாற்போலிருக்கிறது
இருவருக்கும்.
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.