Pages

Friday, April 22, 2022

எல்லாம் மாயை..

நீண்டதொரு புகார்ப்பட்டியலுடன்
காத்திருந்தது அவன் நாய்
வெளியே அடிக்கடி கூட்டிச்செல்லாததிலிருந்து
கழுத்துப் பட்டையின் நிறம் 
பிடிக்கவில்லை என்பது வரை
வாசித்து முடித்தபின்
இப்போதெல்லாம்
பக்கத்து வீட்டுப்பூனையின் மேல்தான்
பாசம் பொங்குகிறதுனக்கு
எனக்கேவியது
நாய்களைப்போலொரு
பாவப்பட்ட ஜென்மம் ஏதுண்டு?
நானொன்றும் 
முழுநேரக் குற்றவாளியல்ல
என் பற்களும் நகங்களுமே குற்றவாளிகளன்றி
நானெப்போதுமில்லை
பழிகளைச்சுமந்தே
வளைந்த என் முதுகு
இற்றுவிடும் படி இன்னும் ஏற்றாதே
என்றெல்லாம் பிலாக்கணம் வைத்தபின்
கைக்குள் சிறை வைத்திருந்த 
சிட்டுக்குருவியுடன்
மரண விளையாட்டைத் தொடர்ந்தது
அது 
கீறிக்கிழித்து ஒளித்த சட்டையைத் 
தேடிக்கொண்டிருக்கிறான் அவன்.

No comments:

Post a Comment

கவிதை சொன்னவர்கள்.