துக்கம்
ஒரு விருந்தாளியைப்போல்
வந்தமர்கிறது
நீங்கள்
அதை பலமாக உபசரிக்கிறீர்கள்
பல்வேறு விதமாய்ப் போஷிக்கிறீர்கள்
அதற்கு எவ்விதக் குறையும் ஏற்படாவண்ணம்
அதன்
பழம்பெருமை பேசி வளர்க்கிறீர்கள்
உங்களிடமே தக்க வைத்துக்கொள்கிறீர்கள்
அணுவளவாய் நுழைந்தது
மெல்ல மெல்ல
அத்தனையையும் ஆக்கிரமித்துக்
கபளீகரம் செய்கிறது
நீங்கள் உட்பட
பின் எண்ணத்துவங்குகிறது
நீங்கள் எத்தனையாவதென.
அற்புதம்..
ReplyDelete