இரவுணவிற்கு உப்புமாதான்
எனக்கேள்விப்பட்ட கணத்திலிருந்து
வயிற்றுவலி தொடங்கியது பேத்திக்கு
தாத்தாவுக்கோ உப்புசமாம்
வழக்கம்போல் தாத்தாவுடன்
வழக்கமான மருத்துவரிடம் போவதாய்
வழக்கமான பொய்யைச்சொல்லி
வழக்கமான உணவகத்தில்
வழக்கம்போல் புரோட்டாவை விழுங்குகிறார்கள்
வழக்கம்போல் முனகி நடிக்கும் பேத்தியிடம்
நல்லாச்சி நீட்டுகிறாள்
கசக்கும் கஷாயத்தை
வழக்கமில்லா வழக்கமாக
தாத்தாவுக்கில்லையா என்றா கேட்டீர்கள்
அவர்
அறிதுயில் கொண்டு அரைஜாமம் ஆயிற்று.
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.