ஓடைக் குறுமணல் சோறாய் மின்ன
உருவிய இலைகள் கீரையாய் ஒதுங்க
கிள்ளிய பூக்கள் காயாய் அமைய
நட்சத்திரம் பொரித்து
செங்கமங்கல் குழம்பூற்றி
கழுவித்துடைத்த நிலாத்தட்டில்
உணவூட்டுகிறாள் நல்லாச்சிக்கு
தொட்டும் துளாவியும் கதைகளோடும்
பேத்தி ஊட்ட
கதைகளில் மயங்குகிறாள் நல்லாச்சி
உண்ண மறந்து
தனக்குமோர் கவளமென
கைநீட்டுகின்றன தெய்வங்கள்
கதை கேட்க மறந்து.
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.