ப்ப்போ..
கசியும் கண்களை புறங்கையால் சிறையிட்டு
உதடுகளை அழுத்திக்குவித்துச் சொன்னபடி
காய் விடுகிறாள் பேத்தி
எவ்விக்குதித்தும் எட்டாத செம்பருத்திப்பூவிடம்
முக்கிமுக்கி முதுகு வளைத்தும்
முன் நகரவியலாத ஆற்றாமையுடன்
தத்தளிக்கிறது செடி
ஒருவர் முகம் நோக்கி இன்னொருவர்
எத்தனை யுகங்களாய்க் கடந்தனவோ நொடிகள்
ஆற்றாமையும் இயலாமையும் இரு கரைகளாய்
பெருக்கெடுத்தோடுகிறது ஆசைவெள்ளம்
ஒரு தேன்சிட்டோ
மெல்லிய தென்றலோ
கடந்து சென்ற நல்லாச்சியோ
யாரோ ஒருவர்
ஏதோவொன்று
பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை
பழம் பழம் பழம்...
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.