கடலென விரிந்து பரந்திருக்கும்
பகலின் அலைகள்
ஒதுக்கிச்சேர்க்கும் அனுபவங்களின்
சிடுக்குகளிடையே மிதந்தலையும்
சிப்பிகளுக்கும் மற்றவற்றுக்குமூடே
விதியொளித்திருக்கும்
மின்னுஞ் சிறுமுத்து
ஏற்புடைத்தில்லை இது எமக்கு
பென்னம்பெரிதே எமக்குத் தகுதியென
அலசியலசி வீசியதில்
ஔியிழந்தனைத்தும் அகன்றுவிட
மிஞ்சிய இருட்சாகரத்தின் அமைதியில்
ஆதிமுத்து வந்தமர்கிறது
கிடைத்ததைத் தொலைத்து
கிட்டாததற்காய் ஏங்கி
பாழும் கனவுவெளியில்
அங்கிங்கெனாதபடி தேடியலைந்த இறுதியில்
மிஞ்சுகிறது
ஒரு பிடி சூன்யம்.
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.