Pages

Saturday, May 7, 2022

பெருங்கருணை


தேர்ந்த நடனமங்கையின் நளினத்தோடு
இடுப்பை அசைத்தசைத்து
நீந்திக்கொண்டிருக்கிறது அம்மீன்
தொட்டுப்பிடிச்சு விளையாடிய
சகமீன்கள் ஒளிந்து கொண்டுவிட
தேடித் தட்டழிகிறது
சொப்பு வாய் திறந்து கூவியழைக்கிறது
ஆள் நிழல் கண்டதும் ஆழத்தில் மறைகிறது
மீனின் தவிப்பை 
தப்பர்த்தம் கொண்ட மரம்
காக்கும் நோக்கில்
இலைகளை உதிர்க்கிறது ஒவ்வொன்றாய்
மிதக்கும் இலையே கேடயமாய்
ஒளிந்து கொள்கிறது பயந்த சிறுமீன்
பதறும் மரத்திடம்
ஒன்று சொல்ல வாய் திறந்து
பின்
ஏதும் சொல்லாமல் இரை மேய்கின்றன
அத்தனை மீன்களும்.

No comments:

Post a Comment

கவிதை சொன்னவர்கள்.