Pages

Saturday, January 7, 2023

நல்லாச்சி - 43

வெண்டையை நுனி ஒடிக்காமல்
புடலை சுரைகளை நகத்தால் அழுத்தாமல்
காளையைக்கூட சாட்டையின்றி
தட்டிக்கொடுத்து
பக்குவமாய்க் கையாளும் தாத்தா
வீட்டு மனிதர்களிடம் மட்டும்
வன்முகத்தைக் காட்டுவது
ஏனெனக் குமைகிறாள் பேத்தி
பேச்சற்று தாத்தா நழுவி விட
பதிலற்று நல்லாச்சி ஊட்டிய பால்கஞ்சி
அன்று 
சற்றே உப்புக்கரித்தது.

No comments:

Post a Comment

கவிதை சொன்னவர்கள்.