"ஓரி உலகெலாம்.... உலகெலாம் சூரியன்"
நல்லாச்சி கற்றுத்தந்த பாடலை
மனனம் செய்தபடி
ஏழாங்கல் விளையாட முயல்கிறாள் பேத்தி
பாடல் வரிகள் வசப்படும்போது
கற்கள் நழுவுவதும்
கற்களை அள்ளும்போது
பாடல் மறப்பதுமாக
கவனப்பிசகில் தவிப்பவளிடம்
கவனக்குவிப்பிற்கு
விளையாட்டுமொரு பயிற்சியே என அறிவுறுத்துகிறாள் நல்லாச்சி
பயிற்சி வகுப்புகளின்றி
ஆயிரக்கணக்கில் கட்டணமுமின்றி
ஆங்கோர் முன்னேர்
பின்னத்தி ஏரைத் தயார் செய்கிறது
கடமையில் கருத்தாய்.
No comments:
Post a Comment
கவிதை சொன்னவர்கள்.