காற்று வந்து சீண்டும் பொழுதிலும்
கற்கள் விழுந்து வைக்கும் போதுகளிலும்
கலங்கிக் கலைந்து அலைக்கழிப்புற்றாலும்
கோபத்தின் அடையாளமாய்
புருபுருவென்ற முணுமுணுப்போடு
அலைக்கரம் கொண்டு காயம் தடவி
தானாகவே சமாதானமாகியும் கொள்கிறது அது
அதன் பாட்டிற்கு இருந்ததைக்
கலைத்து விட்டு
“இனி அதன் பாடு” என்ற உதட்டுச்சுழிப்போடு
அடுத்த குளத்தைக் கலைக்க
போய்க்கொண்டிருக்கிறது காற்று
உடைந்த சூரியத்துணுக்குகளை அள்ளிக்கொண்டு
அலையலையாய்த் துரத்திக்கொண்டு வருகிறது குளம்.
பி.கு: கவிதையை வெளியிட்ட அதீதத்திற்கு நன்றி..