Pages

Saturday, December 11, 2021

தீர்த்துவிட்டுப் பேசலாம்.


உனது கனிகளை நீ பறிகொடுத்தமைக்கு
நானெப்படிப் பொறுப்பாவேன்
வேலியிட்டுப் பாராட்டிச்சீராட்டி
காத்து வளர்த்தது நீயெனினும்
வாசனை விடு தூதனுப்பி
பிறர் கை வீழ்ந்த
அவற்றைக் கடியாத
உன் பாரபட்சம் 
இதோ பல்லிளித்துவிட்டதே
அகராதியிலில்லாத வார்த்தைகளைக்கூட
சம்மன் அனுப்பி வரவழைத்து
என்னை அர்ச்சிக்கிறாயே
அத்தனை கல்நெஞ்சமா உன்னுடையது
இதோ
கையிலிருக்கும் கவண்கல்லையும்
சாறுபடிந்த கத்தியையும்
கை விட்டு வருகிறேன்
தீர்த்துவிட்டுப் பேசலாம் வா..

0 comments: