மனிதனே,
இந்த விண்ணிலும்
மண்ணிலும்
நீ எதைத்தேடி
அலைகின்றாய்;
எட்டாத உயரத்தில் கூட ஏறிச்சென்று,
நீ எதைப்பிடிக்க
முயலுகின்றாய்?
நாம் பறக்க விட்டுவிட்ட
மனிதாபிமானத்தையா!
அல்லது,
குழி தோண்டிப்புதைத்து விட்ட
பண்பாட்டையா?
கடவுளைப்போலவே
இவைகளின்
இருப்பும், சந்தேகத்துக்கிடமாகி
வெகு காலமாகிவிட்டது.
விலைவாசியுடன்
போட்டி போட்டுக்கொண்டு
நீ பறந்தது போதும்;
சற்றே உன் இறக்கைகளுக்கு,
இளைப்பாறல் கொடு.
இந்த விண்ணிலும்
மண்ணிலும்
நீ எதைத்தேடி
அலைகின்றாய்;
எட்டாத உயரத்தில் கூட ஏறிச்சென்று,
நீ எதைப்பிடிக்க
முயலுகின்றாய்?
நாம் பறக்க விட்டுவிட்ட
மனிதாபிமானத்தையா!
அல்லது,
குழி தோண்டிப்புதைத்து விட்ட
பண்பாட்டையா?
கடவுளைப்போலவே
இவைகளின்
இருப்பும், சந்தேகத்துக்கிடமாகி
வெகு காலமாகிவிட்டது.
விலைவாசியுடன்
போட்டி போட்டுக்கொண்டு
நீ பறந்தது போதும்;
சற்றே உன் இறக்கைகளுக்கு,
இளைப்பாறல் கொடு.
கற்பனைச்சிறகுகளினூடே
தெரியும் நிஜ உலகத்தை;
உன் மூன்றாவது கண்
கண்டுபிடிக்கட்டும்.
உயர்ந்த குறிக்கோள்களுக்காகவே
படைக்கப்பட்ட வாழ்வின்;
முடிவில்லா தேடலின் முடிவில்
ஏதேனும் மிஞ்சும்.
