Pages

Saturday, March 14, 2015

ஆச்சியின் வாசனை.. (நல்லாச்சி - 2)

மெஹந்தி இடத்தெரியாத நல்லாச்சியை
உள்ளங்கையில் சிவந்திருந்த
நூடுல்ஸ் வரிகளும் அன்னமும்
சற்றே மிரளச்செய்திருந்தன
தொப்பியணிந்த விரல்களும்
இட்லி தோசையிட்ட உள்ளங்கைகளுமாய் வாழ்ந்த
அந்த கிராமத்துமனுஷி
சற்று அந்நியப்பட்டே நின்றிருந்தாள் அச்சூழலில்
அடுத்த விடுமுறைக்குள் கற்றுக்கொள்வதாய்
சபதமிட்டிருந்த நல்லாச்சி
சாக்குச்சொல்ல வார்த்தையும் தேடிக்கொண்டிருந்தாள்

பட்டணத்துப்பேத்தியை எதிர்கொள்ள நாணியவளிடம்
இட்லி தோசை வரைந்து
கூடுதலாய்த்தொப்பிகளும் வேண்டிய
அந்தக்கரும்புக்கொழுந்தின்
மருதாணிப்பூங்கரங்களில்
இழுத்தணைத்து முத்தமிட்ட ஆச்சியின்
அன்பு சிவந்திருந்தது
பேத்தியின் கைகளில்
மருதாணி வாசனையுடன்.

வால்: கவிதையை வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி.