Pages

Wednesday, October 6, 2010

அய்யோ..அய்யோ..அய்யோ....

கமலி வளர்த்த ஞமலி
ஓடிப்போயிற்றன்றொருகாலை;
சோறூட்டிப்பாராட்டினேனே
பிள்ளையைப்போல்
என்றவளரற்ற...
'சோறுதான் வெச்சியா??' என்றதற்கு
பாலும்சோறும் பதமாய்
வைத்தேன் தினமுமென்றாள்..

'வாலைப்போலவே நாவும் நீளமாயிற்றேயதற்கு!!
அமிர்தமேயாயினும்
அனுதினமும் உண்ணக்கூடுமோ??'
என்றதற்கு;..
'ஹி..ஹி..ஹி..' என்றவள்வழிய,
என் பதில் என்னவென்று,.. சொல்லவும் வேண்டுமோ!!!!!