Pages

Tuesday, March 16, 2010

முடிவில்லா தேடல்..

மனிதனே,
இந்த விண்ணிலும்
மண்ணிலும்
நீ எதைத்தேடி
அலைகின்றாய்;

எட்டாத உயரத்தில் கூட ஏறிச்சென்று,
நீ எதைப்பிடிக்க
முயலுகின்றாய்?

நாம் பறக்க விட்டுவிட்ட
மனிதாபிமானத்தையா!
அல்லது,
குழி தோண்டிப்புதைத்து விட்ட
பண்பாட்டையா?

கடவுளைப்போலவே
இவைகளின்
இருப்பும், சந்தேகத்துக்கிடமாகி
வெகு காலமாகிவிட்டது.

விலைவாசியுடன்
போட்டி போட்டுக்கொண்டு
நீ பறந்தது போதும்;
சற்றே உன் இறக்கைகளுக்கு,
இளைப்பாறல் கொடு.

கற்பனைச்சிறகுகளினூடே
தெரியும் நிஜ உலகத்தை;
உன் மூன்றாவது கண்
கண்டுபிடிக்கட்டும்.

உயர்ந்த குறிக்கோள்களுக்காகவே
படைக்கப்பட்ட வாழ்வின்;
முடிவில்லா தேடலின் முடிவில்
ஏதேனும் மிஞ்சும்.


9 comments:

Anonymous said...

தேடல் இல்லைன்னா உலகமே இல்லையாம் :)

Paleo God said...

ஆமாங்க தேடிகிட்டே இருக்க வேண்டியதுதான்..:))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

அதானே.. கிடைக்காமலா போயிடும் :-)))

Ahamed irshad said...

கவிதை அருமை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது இர்ஷாத்,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கவிதன் said...

கற்பனைச்சிறகுகளினூடே
தெரியும் நிஜ உலகத்தை;
உன் மூன்றாவது கண்
கண்டுபிடிக்கட்டும்.

அசத்தல்!!! அருமை!!! வாழ்த்துக்கள் நண்பரே!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதன்,

நன்றிப்பா..

அகலிக‌ன் said...

"உயர்ந்த குறிக்கோள்களுக்காகவே
படைக்கப்பட்ட வாழ்வின்;
முடிவில்லா தேடலின் முடிவில்
ஏதேனும் மிஞ்சும்"

நமக்குமுன் எவரோ விட்டுச்சென்ற மிச்சத்தைத்தான் நாம் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
நாம் விட்டுச்செல்லும் மிச்சம் முன்னதைக்காட்டிலும் சத்து குறைந்ததாய்தான் இருக்கும் தவிர்க்கமுடியாது.