Pages

Sunday, January 30, 2011

ரத்தக்கடல்..





உயிர் தரித்திருப்பதென்பது
மீனுக்கு மட்டுமல்ல
மீனவனுக்கும் போராட்டமாகிவிட்டது
தினந்தோறும்!!!..
கடலுக்குள் அழுவதால்
எங்கள் மீனவனின் கண்ணீரும்
வெளியில் தெரிவதில்லை போலும்..
காராக்கிரகத்தையும் குண்டுகளையும்தவிர
மரணமும் பரிசாய்க்கிடைப்பதுண்டு அவனுக்கு.

வாக்குச்சீட்டில் 
குத்திய பாவத்துக்கு
முதுகில் குத்தப்படுவதென்பது,
சாபக்கேடான வாடிக்கையாகிவிட்டதென்றாலும்;
மறுபடியும் நாடித்தான் செல்கிறோம்
விட்டில்பூச்சிகளாய்,
விடிவெள்ளியென பொய்மினுங்கை பூசிக்கொண்ட
தீப்பந்தங்களை நோக்கி.

இறையாண்மையென்று பொய்க்கூக்குரலிட்டு
தன்சொத்தைப்பாதுகாக்கும்
மயில்வேடமிட்ட வான்கோழிகளுக்கு,
உயிரையே சொத்தாய்க்கொண்ட
எளியவனை 
இலவசமெதுவும் பெற்றுக்கொள்ளாமல்
மனிதனாய் நீடிக்கும் யாரேனும் அறிமுகப்படுத்தி வையுங்கள்..
நம்முடைய இரைக்காகவும்தான்
அவன் செத்துமடிகிறான்.

எல்லை கடந்தும் தாக்கும்
எல்லையில்லா பயங்கரவாதத்தை
தடுக்கவொட்டா எல்லைச்சாமிகளாய்..
வாக்குறுதிகளை
வரமெனவீசிவழங்கும் கூட்டம் வருமுன்
நமக்கு நாமே
உறுதிக்காப்பிட்டுக்கொள்வோம் 
மனிதம்மட்டுமே காப்போமென்று..

டிஸ்கி:  தமிழக மீனவர்களின் மீது நடைபெறும் கட்டவிழ்த்த வன்முறையை கண்டித்து, அனைவரும் கூட்டு முயற்சியில், அனுப்பவிருக்கும் இந்த மனுக்கடிதத்தில் நான் 1870 ஆவது நபராக கையெழுத்திட்டு விட்டேன். அப்ப நீங்க?????


விண்ணப்பம் இங்கே இருக்கு.





4 comments:

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said...

//வாக்குச்சீட்டில்
குத்திய பாவத்துக்கு
முதுகில் குத்தப்படுவதென்பது,
சாபக்கேடான வாடிக்கையாகிவிட்டது//

உண்மைதான்



நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்!

Thanglish Payan said...

///வாக்குச்சீட்டில்
குத்திய பாவத்துக்கு
முதுகில் குத்தப்படுவதென்பது////

Its nice...

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.