நினைவுப்பேழை
திறந்து கொள்ளும் நொடிகளிலெலாம்
மீட்டிச்செல்கிறது மனவீணையை,
இழை இடைவெளியில்
புகுந்து பரவும் சுகந்தக்காற்று.
மல்லிகையாய், சந்தனமாய்
மொட்டவிழ்ந்து மணக்கும்
ஒவ்வொரு நினைவிழையின்
மெல்லிய மீட்டலிலும்
பொங்கி வழிகின்றன
சுபஸ்வரங்களும்
சில சமயங்களில் அபஸ்வரங்களும்..
ரோஜாக்கள் மணக்கும் மண்ணில்தான்
ஊமத்தம்பூவும் மலர்கிறதெனினும்
ஒவ்வொரு ரோஜாவாய்ச் சேர்த்து நிமிர்கிறேன்,
இதயம் நிரப்பிச் செல்கிறது
ஸ்வரக்கொத்து..
பி.கு: இன்அண்ட்அவுட்சென்னை இதழில் வெளியானது

திறந்து கொள்ளும் நொடிகளிலெலாம்
மீட்டிச்செல்கிறது மனவீணையை,
இழை இடைவெளியில்
புகுந்து பரவும் சுகந்தக்காற்று.
மல்லிகையாய், சந்தனமாய்
மொட்டவிழ்ந்து மணக்கும்
ஒவ்வொரு நினைவிழையின்
மெல்லிய மீட்டலிலும்
பொங்கி வழிகின்றன
சுபஸ்வரங்களும்
சில சமயங்களில் அபஸ்வரங்களும்..
ரோஜாக்கள் மணக்கும் மண்ணில்தான்
ஊமத்தம்பூவும் மலர்கிறதெனினும்
ஒவ்வொரு ரோஜாவாய்ச் சேர்த்து நிமிர்கிறேன்,
இதயம் நிரப்பிச் செல்கிறது
ஸ்வரக்கொத்து..
பி.கு: இன்அண்ட்அவுட்சென்னை இதழில் வெளியானது
