Pages

Wednesday, March 6, 2013

ஸ்வரக்கொத்து.. (இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது)

நினைவுப்பேழை
திறந்து கொள்ளும் நொடிகளிலெலாம்
மீட்டிச்செல்கிறது மனவீணையை,
இழை இடைவெளியில்
புகுந்து பரவும் சுகந்தக்காற்று.

மல்லிகையாய், சந்தனமாய்
மொட்டவிழ்ந்து மணக்கும்
ஒவ்வொரு நினைவிழையின்
மெல்லிய மீட்டலிலும்
பொங்கி வழிகின்றன
சுபஸ்வரங்களும்
சில சமயங்களில் அபஸ்வரங்களும்..

ரோஜாக்கள் மணக்கும் மண்ணில்தான்
ஊமத்தம்பூவும் மலர்கிறதெனினும்
ஒவ்வொரு ரோஜாவாய்ச் சேர்த்து நிமிர்கிறேன்,
இதயம் நிரப்பிச் செல்கிறது
ஸ்வரக்கொத்து..

பி.கு: இன்அண்ட்அவுட்சென்னை இதழில் வெளியானது

3 comments:

ராமலக்ஷ்மி said...

ரோஜாக்களை சேகரிப்போம். அழகான கவிதை. இதயத்தை நிரப்பியது ஸ்வரக்கொத்து.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கொத்தான வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

இதயம் நிரப்பிச் செல்லத் தவறவில்லை கவிதை. ரோஜாக்கள் சேகரித்து மகிழ்வோம் வாழ்வில்!