Pages

Tuesday, May 24, 2016

எவ்வரையில்..

ஒரு தாய்ப்பறவைக்கேயுரிய லாவகத்துடன்
ஒவ்வொரு குச்சியாக உருவி
கூட்டைக்கலைத்துக்கொண்டிருப்பவன்
அதே லாவகத்துடன் முட்டைகளையும்
சட்டைப்பையில் பத்திரப்படுத்திக்கொள்கிறான்
மாலையில் கூடு திரும்பும் பறவைகள்
தேடித் தட்டழியப் போவதைப்பற்றி
அவனுக்கென்ன கவலை..
காக்கைக்கூட்டில் முட்டையிடும் குயிலிடமிருந்து
கள்ளத்தனம் கற்றிருந்தால்
கண்மறைவாய்க் கூடு கட்டியிருந்திருக்கலாமென்று
சுள்ளிகளை மறுபடியும் சேகரிக்கும் இப்பறவைகளுக்கு
என்றேனும் தோன்றக்கூடும்
அதுவரை
கலைத்தலும் உருவாக்குதலும் பொருட்டே
உருண்டு கொண்டிருக்கும் அவ்வுலகம்.