Pages

Monday, February 15, 2010

சில நினைவுகள்

நினைவுகளின் சுமைகளில்
அழுந்தி விடா வண்ணம்
என்னை நானே
மீட்டெடுத்துக்கொள்கிறேன்...

குட்டிக்குரங்காய்
தொற்றிக்கொண்டு
கூடவே வரும் நினைவுகளை
உதற முயன்றிருக்கலாம்...

சில நினைவுகள்
புன்னகைகளை விதைத்து விட்டு
செல்கின்றன.
சில நினைவுகள்
கண்ணீரை
அறுவடை செய்கின்றன்.

அருவியைப்போல்
தடதடக்கும் சில நினைவுகள்
குப்புறத்தள்ளி வேடிக்கை பார்க்கும்...
அழகான சில நினைவுகள்
ஆறுதலும் சொல்லும்...

சளசளவென்ற ஓயாத
நினைவுகளிலிருந்து
விடுதலை எங்ஙனம்!!!!!

12 comments:

அண்ணாமலையான் said...

அது கெடைக்காமத்தானே எல்லாரும் டாஸ்மாக் போறாங்க..?

அன்புடன் நான் said...

நினைவுகள்... கவிதையும்...கூட நாளை நினைவுகளில ஏதாவது செய்யலாம்...... நல்லாயிருக்குங்க

கண்மணி/kanmani said...

கவிதையும் நல்லாத்தான் இருக்குங்கோ

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அண்ணாமலையான்,

டாஸ்மாக் நினைவுகளும் கூடசேர்ந்துகிட்டு படுத்துமே!!!பரவாயில்லையா :-))))

வந்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கருணாகரசு,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்மணி,

நன்றிங்கோ :-))))

கண்ணகி said...

மனம் ஒரு குரங்கு.....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

அதனால்தான் தாவிக்கொண்டே இருக்கிறது.

நன்றி.

ஆர்வா said...

நினைவுகள் தாவித்தாவி செல்கின்றன பின்னோக்கி

SriSurya said...

அருமை.

வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதைகாதலன்,

தேடல் முடிவடைந்ததும் திரும்பிவிடும் :-))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீ சூர்யா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.