ஆழ்நிலைக்கனவுகளொன்றில்
பிடிமானத்துக்காய்
துழாவிய கைகளில்
சிக்காது விளையாடுகின்றன;
எப்போதோ
நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
நினைவுகள்,
பெருங்கனவின் தணியாவெப்பத்தில்
காலாவதியாகுமுன்
காலம் நகர்த்திச்சென்ற
படகொன்றில்
துடுப்பசைத்துச்செல்கின்றன
தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..
டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)
