Pages

Wednesday, October 26, 2016

மெல்லென நகரும் சாலை

சீரான இரத்த ஓட்டம் போல்
ஓடிக் கொண்டிருந்த வாகனங்கள்
காவலர் தன் பணி செய்யத்தொடங்கிய கணத்திலிருந்து
முடிச்சிட்டுக்கொண்ட நாளங்களில்
தேங்கத்தொடங்கியதும்
உறுமீன் வரும் வரை வாடியிருந்த ஒருத்தி
மல்லிகைப்பூ விற்கத்தொடங்குகிறாள்
அவள் முடிக்கற்றைகளை அணிசெய்த சாரல் துளிகள்
சிறுவைரங்களையொத்திருப்பதை அவளறியாள்
இதோ இச்சாலையோரத்தில் முளைத்திருக்கும்
பூ நாற்றுப் பண்ணைச்செடிகள்
வானவில்லை கரைத்துக்குடித்து விட்டு
அத்தனை வண்ணங்களிலும் பூத்திருக்கின்றன.
புற்றீசல்களாய்ப் புகுந்து புறப்பட்டு
தத்தம் வயிற்றுப்பிழைப்பிற்கு
வழி தேடிக்கொண்டிருக்கும் சாலையோர வியாபாரிகளின்
கண்களிலும் பிரதிபலிக்கின்றன
பண்டிகைக்கால தேவைகள்
என்ன அவசரம்?
மெதுவாய்த்தான் நகரட்டுமே இப்போக்குவரத்து.

4 comments:

ஸ்ரீராம். said...

காட்சிக்கவிதை. அல்லது கவிதைக்காட்சி?

:)))

Unknown said...

ji traffic hurdle o.k
but any shocking news from the capital of tamilnadu
would uproot the ivelihood of many people
for ten days atleast...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

கண்ணால் கண்ட காட்சியில் பிறந்த கவிதை :-))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தர்,

அசம்பாவிதம் ஏதும் நிகழாதிருக்கப் பிரார்த்திப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.