Pages

Friday, August 6, 2021

நல்லாச்சி - 11

"வாசலுக்கு மங்கலமூட்டுவதோடு
பிற உயிரினங்களுக்கும் உணவாகும்"
ஏனென்று கேட்ட பேத்திக்கு
விளக்கியபடி
அரிசி மாக்கோலமிடுகிறாள் நல்லாச்சி
பேத்தியின் சிறு கை அள்ளிய நீரெலாம்
கோலத்தின் வழி இழியக் கண்டு
பதறிய ஆச்சியை
அமர்த்தி நவில்கிறாள் பேத்தி
"எறும்புக்கு விக்கலெடுப்பின் என் செயும்?
ஆகவே நீரும் வைத்தேன்"
ஞே..யென மயங்கிச் சாயும்
ஆச்சியின் முகத்தில்
ஆரேனும் நீர் தெளிப்பீராக.

0 comments: