Pages

Friday, November 5, 2021

நல்லாச்சி - 16

வடை கிடைக்கப்பெறாத காகங்களுக்கென்றே
நிலவில் வடை சுடுகிறாள்
பாட்டியொருத்தி
சோறுண்டவாறே பேத்தி சொல்லும் கதைக்கு
உம் கொட்டிக்கொண்டிருக்கிறாள் நல்லாச்சி
பாவப்பட்ட நரிகளையெலாம்
முகத்தில் விழிக்கத்தோதாய்
தம் முற்றங்களில் தளைத்துவிட்டு
பாடச்சொல்லி
காகங்களிடம் கெஞ்சும் பேராசை மனிதர்களை
அண்டவொட்டாமல்
நட்சத்திரங்களையெறிந்து விரட்டுகிறாளாம் பாட்டி
வானத்தைச்சுட்டி நீளும்
பேத்தியின் விரல்நுனித் திசையில்
பொழிகிறது நட்சத்திரமழை
அள்ளிக்கொள்கிறாள் நல்லாச்சி.

0 comments: