Pages

Monday, November 22, 2021

நல்லாச்சி - 17

பயிர்பச்சை செழிக்கணும்
கன்றுகாலி பெருகணும்
புயல்மழையே கதியென்றிலாமல்
பருவமழையும் பொழியவேணுமென
வேண்டியுருகுகிறாள் நல்லாச்சி
விஸ்வரூபடெுத்திருக்கும்
சொக்கப்பனையின் முன் கைகூப்பி
ததாஸ்து என்றருளுகிறாள் பேத்தி
ஃபைவ்ஸ்டார் சாக்லெட் 
நாலைந்து படைத்தாயெனில்
அனைத்தும் சித்திக்கும் மகளே என
குறுஞ்சிரிப்புடன் அபயக்கரம் காட்டும்
பேத்தியின் கையில் 
தெரளியும் அப்பமும் பொரியுருண்டையும் திணித்து
வெச்சுக்கடி ஆத்தா எங்கூர் சாக்லெட்டை
எனப்படைக்கிறாள் நல்லாச்சி
சடசடத்துச் சிலிர்க்கும் சொக்கப்பனை
ஆசீர்வதிக்கிறது இருவரையும்
தேவதைகள்
பேத்திகளாகவும் பிறப்பதுண்டு.

0 comments: