Pages

Saturday, December 11, 2021

இசைமணம்..


சலித்துவிட்டதாம் அவனுக்கு
சுச்சு போட்டால் இயங்கும்
இயந்திர மேளதாளம்
அருகிருக்கும் கோலவார் குழலியின்
நெடுநேர விளி கூட
விழவில்லை தோடுடைய செவிகளில்
அலுப்புடன் அமர்ந்திருக்கிறான் பரமன்
நடைபாவாடையென 
உதிர்ந்து பரந்திருக்கும் பன்னீர்ப்பூக்களின் மீது
பைய நடைபயின்று
ஒரு நொடி தாமதிக்கும் பிஞ்சுச்சீரடியாள்
ஒரு பூவெடுத்தூத
மெல்லத்தவழ்கிறது இசைமணம்
நர்த்தனம்புரிய எழுகிறார்கள் அம்மையும் அப்பனும்.

0 comments: