Pages

Friday, May 6, 2022

நல்லாச்சி - 32


வடாமும் வற்றலும் காயுமிடத்தில்
மொய்க்கும் காகங்களை
கட்டுப்படுத்த முயல்கிறாள் நல்லாச்சி
அவற்றுக்கொரு பங்கு
கொடுத்த பின்னும்
மேலுங்கேட்பதாக ஆவலாதி சொன்னவள்
அவற்றை விரட்டவென
நூறு உபாயங்களைக் கைக்கொள்கிறாள்
எல்லாக்கூத்தையும் கண்ட பேத்தி
சந்தேகம் கேட்கிறாள்
சில தினங்களில்
தலைவாழை விருந்திட்டு
முன்னோரென மதித்து
வாவென்கிறீர்கள்
இன்னும் சில தினங்களிலோ
வராதே போவென்கிறீர்கள்
குழம்பித்தவிக்கும் காகங்கள்
தன் பசியன்றி வேறெது அறியும்
என்ற பேத்தி
கைப்பிடி அரிசியை இறைக்கிறாள்
காகங்களெல்லாம் அத்திசை செல்கின்றன
பேத்தியை உச்சிநுகர்கிறாள் நல்லாச்சி.

0 comments: