Pages

Friday, February 26, 2010

நிழல்கள்...


சுயம் தொலைத்து
நான் மீண்டபின்னும்;
இன்னும்,
அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறாய்...

விலகி ஓட முயன்று

தோற்றுத்திரும்பி;
காலடியிலேயே
வந்து சுருண்டு கொள்கிறாய்;
விசுவாசமான நாய்க்குட்டியைப்போல்...

தொடர்ந்துதான் வருகிறாயென்று
தொடர்ந்து, நடந்தால்
திடீரென்று காணாமல் போகிறாய்!!!
எதிர்பாரா நேரம் எதிரே வந்து
கண்ணாமூச்சி காட்டுகிறாய்.

உன் நண்பன் நானென்று
கைகோத்து வந்துவிட்டு;
சொல்லாமல் கொள்ளாமல்
போவதை,
என்ன பெயரிட்டு அழைக்க!!!
நீ நிழலா??? ..மனமா???..

8 comments:

அன்புடன் நான் said...

இரண்டுமே பொருந்துவது போலத்தான் தெரியுதுங்க.... கவிதை நல்லாயிருக்குங்க. பாராட்டுக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கருணாகரசு,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

பனித்துளி சங்கர் said...

அழகாய் வார்த்தைகள் தொடுத்து கவிதையாய் அருமை வாழ்த்துக்கள் 1

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி சங்கர்,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

"உழவன்" "Uzhavan" said...

அருமை

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உழவன்,

நன்றி.

கவிதன் said...

கேள்வி கவிதைக்குள் நிழலாடுகிறது...! அருமை!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதன்,

ரசிப்புக்கும் முதல்வரவுக்கும் நன்றி.