Pages

Monday, March 1, 2010

சுதந்திரம்???..

கண்ணுக்குத்தெரியாத
தளைகளால்
பிணைக்கப்பட்டிருக்கிறேன்..

பூட்டுகள் எதுவும்
இல்லைதான்...
ஆனாலும்
விடுபடவும் முடியவில்லை!!!!

உனது விருப்பங்களெல்லாம், என்றோ
எனது
விருப்பங்களாகிவிட்டன:
எனக்கென்று ஓர் மனம்,
அதை நினைத்ததேயில்லை நீ..

எனக்கான
பிறரது கேள்விகளுக்கு;
பதில் சொல்லும் குரலாக
உன் குரல் மட்டுமே ஒலிக்கின்றது.

குனிந்து கொடுத்தே குறுகிப்போன
முதுகின் மேல்,
ஏற்றப்படுகின்றன
வேண்டியமட்டும் பாரங்கள்;

சுமந்தே களைத்துப்போன
என்னைக்காட்டி
பெருமையடிக்கிறாய்:
சுதந்திரமாய் வைத்திருப்பதாக!!!!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
இங்கே அளவுகோல்
வேறாக இருக்கும்வரை
எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..

16 comments:

சந்தனமுல்லை said...

அருமை அமைதிச்சாரல்! கடைசி கேள்வி இன்னும் எனக்குள் எதிரொலிக்கிறது!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

அதை யோசித்ததால் வந்த சிந்தனைகளைத்தான் எழுதிட்டேன்ப்பா..

வந்ததுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமை அமைதிச்சாரல்!

ராமலக்ஷ்மி said...

//சுதந்திரமாய் வைத்திருப்பதாக!!!!//

//எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..//

இதே கேள்வியைத்தான் நானும் எழுப்பியுள்ளேன் எனது இன்றைய பதிவில்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி மேடம்,

படித்தேன்.சீக்கிரமே விடைகிடைக்கும்ன்னு நம்புவோம்.

வருகைக்கு நன்றிங்க.

சுந்தரா said...

//ஆணுக்கும் பெண்ணுக்கும்
இங்கே அளவுகோல்
வேறாக இருக்கும்வரை
எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..//

எல்லாப்பெண்களின் மனசிலும் இருக்கிற கேள்வி...

கவிதை அருமை அமைதிச்சாரல்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

முதல்வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

பதிலும் கிடைச்சுடும்ன்னு நம்புவோம்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை ! வாழ்த்துக்கள் !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி சங்கர்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தியாவின் பேனா,

முதல்வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

vidivelli said...

good..........
supper....supper

you come to my side
I expect.......

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விடிவெள்ளி,

முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கண்ணகி said...

நீங்க சொல்லிட்டீங்க......

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

விரைவில் மத்தவங்களும் சொல்வாங்க.

நன்றிங்க.

கவிதன் said...

குனிந்து கொடுத்தே குறுகிப்போன
முதுகின் மேல்,
ஏற்றப்படுகின்றன
வேண்டியமட்டும் பாரங்கள்;

கவிதை சூப்பர்!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதன்,

நன்றிப்பா.