Pages

Wednesday, August 25, 2010

கணக்குகள் தப்பலாம்....

விட்டுவிட்டு வந்தபின்னும்
வாசலில்
வந்து நிற்கும்
நாய்க்குட்டியாய்;

சென்று நிற்கிறான்
வாழ்ந்துகெட்டவன்,
தனதாய் இருந்த வீட்டில்;
தினம்,
கனவில்.

*************************

தொடங்கிய புள்ளியிலேயே
நிற்கிறது காலம்:

அழித்தழித்து
எழுதியபின்னும்
சரியாகவே தெரிகின்றன
தப்பாய்ப்போன மனக்கணக்குகள்;

இருளிலும், ஒளியிலும்
பறந்து திரிந்த விடைகளை
இனம்கண்டு சேமித்தபின்;
களைப்பு
சொட்டும்போதுதான்
தெரிகிறது:

தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்.


28 comments:

கண்ணகி said...

ஆகா... கவிதைகள்...கவிதாயினி சாரல் அவ்ர்களே...

ராமலக்ஷ்மி said...

இரண்டுமே மிக அருமை.

//தனதாய் இருந்த வீட்டில்;
தினம்,
கனவில்//

//களைப்பு
சொட்டும்போதுதான்
தெரிகிறது:

தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்//

’வலி’மையான வரிகள்.

எல் கே said...

//அழித்தழித்து
எழுதியபின்னும்
சரியாகவே தெரிகின்றன
தப்பாய்ப்போன மனக்கணக்குகள்;
///

nice lines

Anonymous said...

//அழித்தழித்து
எழுதியபின்னும்
சரியாகவே தெரிகின்றன
தப்பாய்ப்போன மனக்கணக்குகள்;//
பிடிவாதத்தின் மற்றொரு முகம் :)
அனைத்தும் நல்லா இருக்கு அமைதிச் சாரல்

விஜய் said...

இரண்டும் அருமை

வாழ்த்துக்கள்

விஜய்

அம்பிகா said...

//களைப்பு
சொட்டும்போதுதான்
தெரிகிறது:

தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்//
அருமையான வரிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரசித்தேன். ,,சாரல்.

Anonymous said...

"தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்."
சரி தான் ..நல்லா இருக்கு பா உங்க கவிதை

VELU.G said...

அருமையான கவிதைகள்

பா.ராஜாராம் said...

இரண்டு கவிதைகளும் ரொம்ப பிடிச்சிருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

ரெண்டுமே நல்லாருக்கு முதல்கவிதை மிகவும் அருமை வறுமையில் வீடிழந்தவனின் வலியை சொல்கிறது...

ஹேமா said...

வாழ்வை வரைந்திருக்கிறீர்கள் சாரல் !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

கவி+தா+இனி ன்னு கேட்டுட்டீங்க. தந்துட்டாப்போச்சு :-)).படிக்க நீங்க ரெடிதானே...

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

அதேதான்.. பிடிவாதம்+ என்ன செஞ்சாலும் தப்பாப்போகுதேன்னு ஒரு நிலை :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜய்,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

ரசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேலுஜி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாரா. அண்ணா,

ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழுலகம்,

பார்த்துட்டா போச்சு...

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

முயற்சி செஞ்சுருக்கேன் :-)))

நன்றி.

suneel krishnan said...

விட்டுவிட்டு வந்தபின்னும்
வாசலில்
வந்து நிற்கும்
நாய்க்குட்டியாய்;

சென்று நிற்கிறான்
வாழ்ந்துகெட்டவன்,
தனதாய் இருந்த வீட்டில்;
தினம்,
கனவில்//
beautiful!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுனீல் க்ருஷ்ணன்,

மிகவும் நன்றி..

நாணல் said...

சாரல்கள் இரண்டுமே அருமை :)