Pages

Wednesday, December 1, 2010

ஓயாதகடலொன்று...

வீட்டை நிறைக்கும்
மழலைப்புன்னகையென
சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே,
கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய் 
ஓடிச்சென்று மறைகின்றன 
கொழுத்த நண்டுகள்..
ஆதரவான தகப்பனைப்போல் 
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;
கொண்டு வந்து சேர்க்கிறது 
கடலின் வாசத்தை..
இன்னொரு நாளை 
முடித்த நிறைவில்
 நாள் முழுதும் உழைத்த களைப்பில்;
மறைந்த ஆதவன்,
உதிக்கிறான் ஒரு குழந்தையின் கையில்
பலூனாய்..
வீடு வந்து சேர்ந்தபின்னும் 
அலையடித்துக்கொண்டிருக்கிறது 
கடல்,
உடையிலிருந்து உதிரும்
குறுமணலுடன்..
கால் நனைக்கவென்று மட்டுமல்லாமல்
எல்லாவற்றுக்குமான விருப்பமாய்...

இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி...



20 comments:

நசரேயன் said...

திண்ணை நல்லா இருந்தா சரிதான்

ஹேமா said...

இயற்கையை ரசித்த அழகான கவிதை சாரல்.திண்ணையில் வாசித்தேன் !

நசர்....!

எல் கே said...

நாசர், திண்ணை ஒன்னும் ஆகிறது தம்பி..

திண்ணையில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

//ஆதரவான தகப்பனைப்போல்
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;// மிகவும் ரசித்தேன் அமைதிச்சாரல்.வாழ்த்துக்கள்!

Anonymous said...

ரொம்ப அழகு கவிதை :)

ராமலக்ஷ்மி said...

//ஆதரவான தகப்பனைப்போல்
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;//

இதமான வரிகளுடன் அழகானதொரு கவிதை, அலைகளின் சங்கீதம் பின்னணியில் ஒலிக்க..!

திண்ணையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

திண்ணைக்கு ஒண்ணும் ஆகலை, திடகாத்திரமா இருக்கு :-))

கும்மியை ஆரம்பிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

நன்றிங்க..

பிரிக்கமுடியாதது என்னவோன்னு கேட்டா நசரும் கும்மியும்ன்னு தயங்காம சொல்லலாம் :-)))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

ரசித்ததுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை..

ரிஷபன் said...

வீடு வந்து சேர்ந்தபின்னும்
அலையடித்துக்கொண்டிருக்கிறது
கடல்//

அழகான கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

நன்றி சகோ..

ஸாதிகா said...

ரசித்து எழுதி இருக்கீங்க அமைதிச்சாரல்.வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

எவ்வளவு ரசிச்சாலும் தீரமாட்டேங்குதே :-))

நன்றி.

Anonymous said...

அழகான உணர்வுகள்
அருமையான கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கல்பனா,

வருகைக்கு நன்றி..