Pages

Thursday, December 18, 2014

காலி முற்றம்..

இனி அந்த முற்றம்
எப்போதும் காலியாகவே இருக்கும்

உடைபடாத ஜன்னல்கள்
எறியப்படாத பந்துகள்
அமைதியைப்போர்த்துக்கொண்டு
மூலையில் முடங்கிய சைக்கிள்களுடன்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஓர் உயிரற்ற உலகம்
துருப்பிடித்து உடைவதன்றி
வேறு விமோசனமில்லை
நிசப்தமான மைதானங்களில் அசைவற்றிருக்கும்
அந்த ஊஞ்சல்களுக்கு

எப்பொழுதேனும் கரையும்
வேப்பமரக்காகம் தவிர்த்து யாருமில்லா
அந்த முற்றத்துடன்
இனி எப்பொழுதும்
துயரம் மட்டுமே துணையாய்..

2 comments:

ராமலக்ஷ்மி said...

அஞ்சலி தீபத்துடன் மனதைக் கனக்கச் செய்யும் வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

அந்த வெறுமை முற்றம்
இப்போது எங்கள் மனங்களிலும்
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்